Thursday, 24 March 2011

பரோட்டா

ஹோட்டலில்  செய்வது போல வீட்டிலேயே சுவையான பரோட்டா







 தேவையானபொருள்கள் ;

மைதா-250 கிராம்
சமையல் எண்ணெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை ;
மைதா மாவை நன்றாக சலித்துவிட்டு உப்பு ,ஒரு ஸ்பூன் எண்ணெய்  சேர்த்து பிசிறிவிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும் .
பிறகு ஒரு ஈரமான துணியிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ நன்றாக மூ
டி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வைக்கலாம்

.பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக   எடுத்து வைத்து க்கொள்ளவும் .


 பிறகு ஒவ்வொரு சப்பாத்தியாக இட்டு ஒன்றன் மேல் ஒன்றாக  எண்ணெய்  தடவி  அடுக்க வேண்டும் .
தொடு மாவிற்கு அரிசி மாவுதான்  பயன் படுத்த வேண்டும் .இது போல் ஐந்து சப்பாத்திகள்அடுக்க வேண்டும் .பிறகு அடுக்கிய சப்பாத்திகளை சுருட்டி ரோல் செய்து துண்டுகளாக நறுக்கவும்..










நறுக்கிய  துண்டுகளை  எடுத்து திருப்பி பார்த்தால் மடிப்புகள்  தெரியும் .அதை அப்படியே அழுத்தி எண்ணெய் தடவி வைக்கவும் .

 பிறகு அழுத்திய உருண்டைகளை கையால் தட்டி பெரியதாக்கவும் [குழவியாலும் தேய்க்கலாம்]
 பிறகு தோசைக்கல்லில் போட்டு நன்றாக திருப்பி போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக விடவும்.

 எளிதான சுவையான பரோட்டா தயார்.தொட்டு கொள்ள காய்கறி குருமாவைத்து கொள்ளலாம்

No comments:

Post a Comment