Tuesday, 30 October 2012

உப்புமா[Rava uppuma]


                                              


தேவையான பொருள்கள் ;
ரவை -2கப் 

 பெரிய வெங்காயம்-1  தக்காளி -1
                                                         பச்சை மிளகாய் -1
                                                      கருவேப்பிலை,இஞ்சி ,
                                                       உப்பு-1/2 ஸ்பூன் 





தாளிக்க
வர மிளகாய் -2

 கடுகு. ,உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
கடலை பருப்பு-1 ஸ்பூன்

சமையல் எண்ணெய்-4 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-2 ஸ்பூன்
செய்முறை     ;ஒரு கடாயில் ஸ்பூன் எண்ணெய் விட்டு ரவையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும் .பிறகு மீதி எண்ணெய் விட்டு கடுகு ,வெடித்தவுடன் ,உளுத்தம்பருப்பு ,மிளகாய் ,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும் .பிறகு வெங்காயம் போட்டு வதங்கியவுடன் தக்காளி பச்சைமிளகாய் ,இஞ்சி ,கருவேப்பிலை சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்றாக கொதித்தவுடன் ரவையை சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக  கிளறவும் பிறகு தீயை குறைத்து  பத்து நிமிடம் வேக வைக்கவும் .வெந்தவுடன் கடைசியாக தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்.உப்புமா ரெடி
--











Sunday, 28 October 2012

வெஜ் பிரியாணி [ easy veg briyaani ]

                                      வெஜ் பிரியாணி [ easy    veg   briyaani  ]   







தேவையான பொருள்கள் ;
 பாசுமதி அரிசி [அ]   பொன்னி அரிசி -200கிராம்
[அரிசியை கழுவி தண்ணீரை  வடித்து விட்டு பத்து நிமிடம் அப்படியே ஊற வைக்கவும் ]
வெங்காயம் -1

[நீளவாக்கில் அரிந்தது]
 பச்சை மிளகாய்   =1[கீறியது  ]
இஞ்சி ,பூண்டு விழுது - 1டீஸ்பூன்
கேரட் -அரை 
[பொடியாக அரிந்தது]
கோஸ் பொடியாக அரிந்தது - 1/4  கப்
உருளைகிழங்கு -1/2
பீன்ஸ் -2
தக்காளி -    1பொடியாக அரிந்தது  
பச்சை கொத்தமல்லி ,புதினா
  நெய் -2ஸ்பூன் 
  சமையல் எண்ணெய்-4ஸ்பூன்
தயிர் -1ஸ்பூன்  
எலுமிச்சம்பழம் ஜூஸ் -1ஸ்பூன் 
  பிரட் துண்டுகள் -10
 மிளகாய்த்தூள் -1   ஸ்பூன்
  கரம் மசாலாதூள் -அரை டீஸ்பூன் 
  பிரிஞ்சி இலை-1
ஏலக்காய்  -2
சோம்பு -ஸ்பூன்

கிராம்பு -1
  உப்பு -ஸ்பூன்
செய்முறை; அடுப்பில்  கடாய் வைத்து சூடானதும் நெய் ஊற்றி  பிரிஞ்சி இலை போட்டு ,பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து  வறுக்கவும் .இதை தனியாக எடுத்து  தட்டில் வைக்கவும் .பிறகு பிரஷர்க குக்கரில் எண்ணெய்[அ]நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய்.,கிராம்பு ,சோம்பு போட்டு பொரிஞ்சவுடன் அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும் ,வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சேர்த்து வதக்கவும் .பிறகு தக்காளி, பச்சை மிளகாய்   =1[கீறியது  ] சேர்த்து வதங்கியவுடன் காய்களை சேர்த்து வதக்கி ,பிறகு மிளகாய்த்தூள் ,கரம் மசாலாதூள்  சேர்த்து கிளறவும்.பிறகு  வறுத்து வைத்த அரிசியை சேர்த்து அதனுடன்      தயிர்  சேர்த்து கிளறவும் .பிறகு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கிளறி குக்கரை மூடி வெயிட் போட்டு
 மூன்று  சத்தம் வந்ததும் இறக்கி வைக்கவும் .பிறகு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பிரட் துண்டுகளை வறுத்து  பிரியாணியில் சேர்த்து கிளறவும் .கடைசியாக எழுமிச்சம்பழம் ஜூஸ்சேர்த்துகிளறவும். முந்திரி பருப்பு வருத்து போடலாம் ,பிறகு பச்சை கொத்தமல்லி சேர்த்து பரிமாறலாம் பிரியாணி ரெடி .இதற்க்கு தொட்டு கொள்ள தயிரில் வெங்காயம் நீளவாக்கில் மெல்லியதாக அரிந்தது,உப்பு சேர்த்து கலக்கவும் .மேலே  கொத்தமல்லி சேர்த்தால்  ரைத்தா      ரெடி. 





https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSlBgytSM7ePfhsDC6JanP_4XgN3agj1WtLDUHCS2FoYIzqqvnYowDgZudo